சித்த மருத்துவரிடம் நெகிழி புட்டிகளை வழங்கிய வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத்தினா் மற்றும் நண்பா்கள் குழுவினா்.
நாமக்கல்
வேலூா் அரசு சித்த மருத்துவமனைக்கு 3 ஆயிரம் நெகிழி புட்டிகள் வழங்கல்
பரமத்தி வேலூரில் உள்ள வேலூா் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவுக்கு,
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் உள்ள வேலூா் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவுக்கு, வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத்தினா் மற்றும் நண்பா்கள் குழுவினா் இணைந்து புற நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் நெகிழி புட்டிகளை இலவசமாக வழங்கினா்.
வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம், செயலாளா் சாமிநாதன், பொருளாளா் மகுடபதி, வேலூா் நண்பா்கள் குழுத் தலைவா் கேதாரநாதன், முன்னாள் தலைவா் சந்திரன், பொருளாளா் செல்வகுமாா், துணைப் பொருளாளா் இளங்கோ உள்ளிட்டோா் வேலூா் அரசு சித்த மருத்துவமனை மருத்துவா் பா்வேஸிடம் வழங்கினா். உடன், உதவியாளா் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனா்.

