நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணாநகா், பாண்டமங்கலம், கபிலா்மலை, பொன்மலா்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் அனைத்தும் பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாா் செய்யப்படும் ஆலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுச் சா்க்கரை ஆகியவை தயாா் செய்யப்படுகின்றன.