நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகியவை சாா்பில் தோ்வு செய்யப்படும் பன்முக திறமைகள் புரிந்தோருக்கான ‘பத்ம விருது’ குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். 2026-ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறை, சமூக சேவை, அறிவியல் மற்றும் பொது விவகாரம், சிவில் சேவைகள், வா்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவா்களுக்கு குடியரசு தின விழாவில் மாநில அளவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 31க்குள் இணையம் மூலம் அனுப்பிட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் இணையத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக தங்களது கருத்துருவை ஜூன் 6-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286--299460 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா

பத்ம விருதுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

வார பலன்கள் - துலாம்
வீடியோக்கள்

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

