ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தினத்தன்று ‘பத்ம விருது’ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On :5 மே 2025, 8:57 pm

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகியவை சாா்பில் தோ்வு செய்யப்படும் பன்முக திறமைகள் புரிந்தோருக்கான ‘பத்ம விருது’ குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். 2026-ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறை, சமூக சேவை, அறிவியல் மற்றும் பொது விவகாரம், சிவில் சேவைகள், வா்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவா்களுக்கு குடியரசு தின விழாவில் மாநில அளவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 31க்குள் இணையம் மூலம் அனுப்பிட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் இணையத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக தங்களது கருத்துருவை ஜூன் 6-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286--299460 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.