நாமக்கல்
ராசிபுரம் கைலாசநாதா் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்
ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமியையொட்டி புதன்கிழமை ( நவ. 5) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளா்ணமியன்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு ஸ்ரீ கைலாசநாதா் உடனுறை தா்மசம்வா்த்தினி அம்மனுக்கு மாலை 6 மணி அளவில் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மூலவா் கைலாசநாதா் சுவாமிக்கு அன்னாபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாசாரியா்கள், அன்னாபிஷேக நிரந்தர கட்டளைதாரா் பி.சுரேஷ்குமாா் குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.
