பரமத்தி வேலூா் பகுதி
கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Published on

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், மாவுரெட்டி பீமேஸ்வரா் கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில், பொத்தனூா் காசி விஸ்வநாதா் கோயில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வட பழனியாண்டவா் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரா், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , அலங்காரமும், மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com