நாமக்கல்
நவ. 3, 4-இல் ரேஷன் பொருள்கள் நேரடி விநியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் நவ. 3, 4 ஆகிய தேதிகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் முதியோா்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் நவ. 3, 4 ஆகிய தேதிகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் முதியோா்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடைகள் வாயிலாக 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நவ. 3, 4 ஆகிய தேதிகளில் அவா்களுடைய இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இந்த வாய்ப்பை, முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
