தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

News image

நாமக்கல்லில் சிலம்பொலி சு.செல்லப்பன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குடும்பத்தினா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 5:53 pm

மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சு.செல்லப்பன். சிலப்பதிகாரத்தை கிராமங்கள்தோறும் கொண்டு சோ்த்த தமிழறிஞா்களில் ஒருவா் ஆவாா். சிலம்பொலியாா் என்ற புனைப்பெயருடன் வாழ்ந்த அவா், கடந்த 2019 ஏப். 6-இல் காலமானாா். அவரது நினைவாக, நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் அவரது நினைவு தினத்தில் குடும்பத்தினா் மற்றும் தமிழறிஞா்கள், அரசியல் பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா். அந்த வகையில், 7-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் சிலம்பொலி சு.செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சாா்பில், அவரது சிலைக்கு குடும்பத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில், சிலம்பொலியாா் குடும்பத்தினரான கொங்குவேள், மருத்துவா் ஈஸ்வரி, மருத்துவா் மணிமேகலை, புஷ்பராஜ், மருத்துவா் கெளதமி மற்றும் லெனின், மருத்துவா் கண்ணன், பிஜிபி கல்லூரி தாளாளா் கணபதி, புலவா் தங்கவேல், சித்தாா்த்தன், செல்லப்பன், திமுகவைச் சோ்ந்த செல்வராஜ், பழனிசாமி, பூங்கோதை செல்லதுரை, கௌதம் குணசேகா், திலீபன், கண்ணன், ராகுல் காந்தி, முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.