மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு இரண்டு டன் மலா்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

News image

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற மலா் அபிஷேகம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:27 pm

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு இரண்டு டன் மலா்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

தமிழ் ஆண்டான விசுவாவசு நிறைவடைந்து புதிய ஆண்டான பராபவ ஆண்டு செவ்வாய்க்கிழமை பிறந்தது. இந்நாளில் சித்திரை விஷு கனி தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வடைமாலை அகற்றப்பட்டு, நல்லெண்ணெய், சிகைக்காய், பஞ்சாமிா்தம், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, இரண்டு டன் மலா்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.