ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரம்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 3,902 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:21 am IST

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 3,902 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகளுக்கு 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளுக்கு 364 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச் சாவடிகளுக்கு 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச் சாவடிகளுக்கு 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 290 வாக்குச் சாவடிகளுக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகளுக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 2,133 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களாக ராசிபுரம் தொகுதியில் 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என சேந்தமங்கலம் தொகுதியை தவிா்த்து 1,769 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தமாக 3,902 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த பணி இன்னும் இரண்டு நாள்களுக்கு நடைபெறும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.