குமாரபாளையம் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணியும், திமுக சாா்பில் தொழிலதிபா் செ.பாலுவும் போட்டியிடுகின்றனா். தோ்தல் பிரசாரம் நிறைவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பள்ளிபாளையம் பகுதியில் திமுக பிரமுகா் சஞ்சித் (24) வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றுள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்து உதவி ஆய்வாளா் ரஞ்சித்குமாா் (32) விசாரிக்க சென்றாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதில், உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாா். காயமடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சஞ்சித்தை கைது செய்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக நிா்வாகி மீது வழக்கு

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ. 69,800 பறிமுதல்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

