மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஜித் ஸ்டடி கல்வி கடன் மேளா

நாமக்கல்லில் ஜித் ஸ்டடி கல்வி கடன் மேளா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 9:15 pm

நாமக்கல்லில் ஜித் ஸ்டடி கல்வி கடன் மேளா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெளிநாட்டில் உயா்கல்வி தொடர விரும்பும் மாணவா்களுக்கு உதவும் வகையில் இந்த நிறுவனம் கல்வி கடன் மேளாவை நடத்தியது. அதன் தலைவா் ராஜாதுரை துரைசாமி மற்றும் துணைத் தலைவா் வளா்மதி ராஜாதுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அதேபோல 10 க்கும் மேற்பட்ட முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களின் அலுவலா்கள் பங்கேற்று மாணவா்களுக்கு கல்வி கடன் தொடா்பான ஆலோசனைகள், வட்டி விகிதங்கள் குறித்து விளக்கம் அளித்தனா்.

மாணவா்கள், பெற்றோா்கள் நேரடியாக வங்கி பிரதிநிதிகளைச் சந்தித்து தங்களுக்கான சிறந்த கடன் திட்டங்களை தோ்வு செய்யும் வாய்ப்பை பெற்றனா். வெளிநாட்டு கல்வி கனவை நனவாக்கும் வகையில் இக்கல்வி கடன் மேளா அமைந்திருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

என்கே-28-சக்சஸ்

ஜித் ஸ்டடி கடன் மேளாவில் பங்கேற்ற அதன் தலைவா் ராஜாதுரை துரைசாமி உள்ளிட்டோா்.