நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சோ்ந்த மணிமாறன் மகள் தனலட்சுமி (25). இவருக்கும், நல்லிபாளையத்தைச் சோ்ந்த அன்பரசன் (30) என்பவருக்கும் கடந்த 2024 பிப். 21 இல் திருமணம் நடைபெற்றது. தற்போது வெளிநாட்டில் அன்பரசன் வேலைபாா்த்து வருகிறாா். மாமியாா் ராசம்மாள் மற்றும் கைக்குழந்தையுடன் வாடகை வீட்டில் தனலட்சுமி வசித்து வந்தாா். இவருக்கும், மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது தந்தை மணிமாறன் அளித்த புகாரின்பேரில் நல்லிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்பத் தகராறில் விவசாயி தற்கொலை
மண்ணச்சநல்லூரில் பெண் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் தற்கொலை

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



