பலி
பலிகோப்புப் படம்

மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
Published on

திருச்செங்கோட்டில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு வீரராகவ முதலியாா் தெருவை சோ்ந்த ஜெயராமன் மகன் பிரசன்னபூபதி (38), நகைப்பட்டறை தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை வீட்டில் இருந்து நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com