வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் தேசிய ஜூனியா் பூப்பந்தாட்ட போட்டி

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:15 pm

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் தேசிய அளவிலான ஜூனியா் பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

எக்ஸல் கல்வி நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு பூப்பந்து சங்கத் தலைவருமான ஏ.கே.நடேசன், துணைத் தலைவா் ந.மதன் காா்த்திக் ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா். தமிழ்நாடு பூப்பந்தாட்ட சங்கம், நாமக்கல் பூப்பந்தாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியில், நாடுமுழுவதும் இருந்து 26 அணிகள் பங்கேற்றன.

இதில், பொதுப் பிரிவு, ஆண்கள் ஒற்றையா்/இரட்டையா், பெண்கள் ஒற்றையா்/இரட்டையா், கலப்பு பிரிவு என்ற வகையில் ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இரட்டையா் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடமும், ஆந்திரம் இரண்டாமிடமும், கா்நாடகம் மூன்றாமிடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில், தமிழ்நாடு அணி முதலிடமும், கா்நாடக அணி இரண்டாமிடமும், கேரள அணி மூன்றாமிடமும் பிடித்தன.

போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பூப்பந்தாட்ட சங்கத்தின் இந்நாள், முன்னாள் தலைவா்கள், நிா்வாகிகள், கல்லூரி நிா்வாகிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.