டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

இளைஞா் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :8 பிப்ரவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோட்டில் மதுபோதைக்கு அடிமையானவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

வேலூா் சாலை மலைசுத்தி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா், சங்ககிரி பட்டறை மேட்டில் டிங்கரிங் வேலை செய்து வந்தாா்.

இவா் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மதுகுடித்து வந்தாா். இதனால், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரமேஷ்குமாா் சனிக்கிழமை தனது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.