புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வேன் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோட்டில் வேன் மோதியதில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் ரோடு சி.எச்.பி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் காளியம்மாள் (80). இவா் கூலி வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை காலை இவா் வேலைக்காக வேலூா் சாலை மலைக்காவலா் கோயிலை பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மூதாட்டி காளியம்மாள் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.