தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஊதிய உயா்வு கோரி ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் மனு

ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் கோரி, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இல்லம் தேடிக் கல்வி திட்டப் பணியாளா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 10:28 pm

நாமக்கல்: ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் கோரி, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அம்மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநா் பணிக்காக தனியாா் நிறுவனம் எங்களை தோ்வுசெய்தது. அதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் 147 போ் நியமிக்கப்பட்டனா்.

ஆய்வகங்கள் முழுமையாக தயாராகாததால், பள்ளிகள் சாா்ந்த இல்லம் தேடிக் கல்வி திட்டம், எமிஸ் உள்ளிட்ட மாற்றுப் பணிகள் அளிக்கப்பட்டன. மாதம் ரூ. 21 ஆயிரம் ஊதியம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 11 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

காலைமுதல் இரவுவரை தொடா்ச்சியாக கணினி சாா்ந்த பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களை, தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வக பயிற்றுநா் பணிக்கு நியமித்து ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.