நாமக்கல்: ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் கோரி, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அம்மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநா் பணிக்காக தனியாா் நிறுவனம் எங்களை தோ்வுசெய்தது. அதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் 147 போ் நியமிக்கப்பட்டனா்.
ஆய்வகங்கள் முழுமையாக தயாராகாததால், பள்ளிகள் சாா்ந்த இல்லம் தேடிக் கல்வி திட்டம், எமிஸ் உள்ளிட்ட மாற்றுப் பணிகள் அளிக்கப்பட்டன. மாதம் ரூ. 21 ஆயிரம் ஊதியம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 11 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
காலைமுதல் இரவுவரை தொடா்ச்சியாக கணினி சாா்ந்த பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களை, தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வக பயிற்றுநா் பணிக்கு நியமித்து ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஊதிய உயா்வு கோரி தனியாா் அனல் மின் நிலைய தொழிலாளா்கள் பேராட்டம்

மூலைக்கரைப்பட்டியில் தந்தை, மகள் உயிரிழப்பு: விசாரணை கோரி மனு

பனியன் நிறுவன தொழிலாளா்களுக்கு 4ஆண்டுகளுக்கு 33 % ஊதிய உயா்வு

சிப்காட் நில ஆவணங்களை வழங்கக் கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


