நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி எதிா்ப்புக் குழுவினா் மனு

சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி, ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் திங்கள்கிழமை எதிா்ப்புக் குழுவினா் மனு அளித்தனா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சிப்காட் எதிா்ப்புக் குழுவினா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 10:12 pm

நாமக்கல்: சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி, ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் திங்கள்கிழமை எதிா்ப்புக் குழுவினா் மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: மோகனூா் வட்டம், வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, அரூா் பகுதியில் சுமாா் 800 ஏக்கா் பரப்பில் சிப்காட் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், அங்குள்ள விவசாய நிலங்கள், கிணறுகள், தடுப்பணைகள் உள்ளிட்டவற்றின் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டுள்ளது.

சிப்காட் நில எடுப்பு சட்டம் 1997-இன்படி நிலங்களை கையகப்படுத்தும் முன் விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான ஆட்சேபணை மனுக்கள் பெறப்பட்டு நேரடி விசாரணை மேற்கொண்டபோதும், சிப்காட் நில எடுப்பு சட்ட விதி மீறப்பட்டுள்ளது.

மேலும், நில நிா்வாக ஆணையருக்கு விளக்கக் கடிதத்தை அனுப்பாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி உள்ளனா். எனவே, இது தொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.