கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு: சுகாதாரத் துறையினா் ஆய்வு

சேந்தமங்கலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்தது குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

News image
சிறுமி லித்யா.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

சேந்தமங்கலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்தது குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், துத்திக்குளம் ரெட்டி காலனியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அருள்பாண்டியன் - விண்விழி தம்பதியின் மகள் லித்யா (12). காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்து செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், சிறுமி லித்யா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடா் ரத்தப்போக்கு ஏற்பட்டது. பலவகையில் சிகிச்சை அளித்தும் ரத்தப்போக்கு குறையவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் இறந்தாா். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்பில்லை; அந்த காய்ச்சலின் ஒரு வகையாகும் என்றனா்.

இதையடுத்து, துத்திக்குளம், ரெட்டி காலனி பகுதிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.