கைது
கைது

பரமத்தி வேலூா் அருகே மது விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
Published on

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

பரமத்தி வேலூா் - ஜேடா்பாளையம் செல்லும் நான்கு சாலை அருகே உள்ள திரையரங்கம் அருகில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபான புட்டிகளை மறைத்துவைத்து விற்பனை செய்வதாக வேலூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா், அதிக விலைக்கு மதுபான புட்டிகளை விற்பனை செய்துகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள உழவா்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரவீண் குமாா் (21) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 26 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைதுசெய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com