மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்ஸோவில் கைது
திருச்செங்கோடு அருகே பாதரையில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மில் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சோ்ந்தவா் காா்த்தி (23). இவா் பாதரையில் உள்ள திருச்செங்கோடு ஸ்பின்னிங் மில்லில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தாா். இவா், கடந்த 12 ஆம் தேதி இரவு மனைவி வேலைக்கு சென்றிருந்த நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு சென்று தனது இரண்டை வயது மகளிடம் தவறாக நடந்துள்ளாா்.
இதையடுத்து குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து காா்த்தியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
