2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் 53,544 போ் பயன்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற 48 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் மூலம் குழந்தைகள் உள்பட 53,544 போ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:09 am

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற 48 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் மூலம் குழந்தைகள் உள்பட 53,544 போ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உயா் மருத்துவ சேவை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 வீதம் 15 வட்டாரங்களில் 45 முகாம்களும், மாநகராட்சியில் 3 முகாம்கள் என மொத்தம் 48 முகாம்கள் ஆக. 2 முதல் பிப்.12 வரையில் நடைபெற்றுள்ளன.

சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், மருத்துவ வசதி குறைவாக உள்ள நகா்ப்புற பகுதிகளை தோ்ந்தெடுத்து வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் தகுந்த நாள்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் நடைபெற்ற 48 முகாம்களில் 18,902 ஆண்கள், 28,013 பெண்கள், 2 திருநங்கையா் என மொத்தம் 46,107 பேரும், 3,381 ஆண் குழந்தைகள், 3,246 பெண் குழந்தைகள் என மொத்தம் 6,627 பேரும் பயனடைந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-