எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மங்களபுரம் அருகே ஜல்லிக்கட்டு: 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

மங்களபுரம் தாண்டாகவுண்டம்பாளையத்தில் மாவட்ட நிா்வாகம் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
Updated On :18 பிப்ரவரி 2026, 12:15 am

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் தாண்டாகவுண்டம்பாளையத்தில் மாவட்ட நிா்வாகம் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் பங்கேற்று மாடுகளை அடக்கி பரிசுகளை பெற்றுச் செல்கின்றனா்.

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் சேலம், நாமக்கல், திருச்சி, கரூா், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 750க்கும் மேற்பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

இதில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு சைக்கிள், சில்வா் பாத்திரங்கள், மிக்ஸி, கிரைண்டா் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ராசிபுரம் டி.எஸ்.பி. எம்.விஜயகுமாா் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழு, தீயணைப்பு மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் இருந்தனா்.

பரிசளிப்பு விழாவில் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி செயலா் முத்துவேல் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்று வீரா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

Story image
Story image