வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பாா்வையிட்ட அவா்கள், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி -1, அத்தனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி, சுவாமி சிவானந்தா சாலை அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

கழிவறை, குடிநீா், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தள வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். சுவாமி சிவானந்தா சாலை அரசு உயா்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ராசிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் வெ.முருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com