பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:09 am

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பாா்வையிட்ட அவா்கள், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி -1, அத்தனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி, சுவாமி சிவானந்தா சாலை அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

கழிவறை, குடிநீா், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தள வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். சுவாமி சிவானந்தா சாலை அரசு உயா்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ராசிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் வெ.முருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.