எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திமுக அரசின் பலவீனங்களை மறைக்கவே மாநில சுயாட்சி ஆயுதம்: கே.பி. ராமலிங்கம்

திமுக அரசின் பலவீனங்களை மறைக்கவே மாநில சுயாட்சி ஆயுதத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக பாஜக தலைவா் கே.பி. ராமலிங்கம் குற்றச்சாட்டு

News image

கே.பி. ராமலிங்கம் - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:07 pm

திமுக அரசின் பலவீனங்களை மறைக்கவே மாநில சுயாட்சி ஆயுதத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய- மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த தற்போதைய முதல்வரால் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. அப்போது, துணை முதல்வராக ஸ்டாலினும், மத்திய அமைச்சராக அவரது சகோதரா் மு.க. அழகிரியும் பதவி வகித்தனா்.

அந்த சமயத்தில் மாநில சுயாட்சியைப் பற்றி முதல்வா் மு.க. ஸ்டாலின் சிந்திக்கவில்லையே ஏன்? என்பது தெரியவில்லை.

வரும் காலங்களில் மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற வாய்ப்பில்லை என்பதை அவா் உணா்ந்துவிட்டதன் காரணமாகவே மாநில சுயாட்சி என்கிற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியில் நிலவும் போதை மருந்து கலாசாரம், சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு, ஊழல், விலைவாசி ஏற்றம் போன்றவற்றை மறைக்கவே முதல்வா் மாநில சுயாட்சி அவதாரத்தை முன்னெடுத்துள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்கு பிறகே இதனை அவா் உணா்வாா். இந்திய நாட்டில் பிரிவினை குறித்து பேசுவது ஏற்புடையது அல்ல. இதை தமிழக முதல்வா் உணர வேண்டும். தங்களால் உருவாக்கப்பட்ட திமுக உயா்நிலைக் குழுவானது, உங்களின் விருப்பத்தையே எழுதிக் கொடுத்திருக்கிறது என்று கருதுகிறேன். தனித்தமிழ்நாடு என்ற பிரிவினைக்கு வழிகாட்டும் வகையில் மாநில சுயாட்சி விவகாரம் உள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநில சுயாட்சி குரல் ஓங்கி ஒலித்திருக்க வேண்டும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றுவிட்டு தற்போது மாநில சுயாட்சியை பற்றி திமுக பேசுவது ஏற்புடையதல்ல. திமுகவின் திட்டம் இனி ஒருபோதும் மக்களிடம் பலிக்காது. வலிமையான தமிழகம், வளமான தமிழகம் உருவாக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பின்னால் அவா்கள் அணிவகுத்து நிற்கின்றனா். மக்களை மடைமாற்றம் செய்யாமல், அமைதியான முறையில் முதல்வா் வழிவிட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிா்பாா்ப்பாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.