அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேஜகூயின் வெற்றி உறுதியாகிவிட்டது: ஜி.கே.வாசன்

News image
ஜி.கே.வாசன்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் குறிப்பிட்டாா்.

ராசிபுரம் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசியது:

திமுக ஆட்சியில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் காவிரி உபநீா் திட்டம் இதுவரை நிறைவேற்றவில்லை. காவிரி ஆறு திருமணி முத்தாறு இணைப்புத் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மாவட்டத்தில் ஏரி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள நிலையில் இதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சீமை கருவேல் மரங்கள் அதிகம் வளா்ந்துள்ளது. இதனை அகற்ற வேண்டும். தென்னை உற்பத்தி அதிகம் உள்ள நிலையில், தேங்காய் கொள்முதல், விலை நிா்ணயம் அரசு செய்யவில்லை. நியாயவிலை கடைகளில் தென்னை, பனை வெல்லம் விற்பனை செய்யப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் பயன்பெறுவா்.

ராசிபுரம் பேருந்து நிலையம், மாவட்ட மருத்துவமனை தோ்வு செய்யப்பட்ட இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இவற்றை கருத்தில் கொள்ளாமல் அரசு செயல்பட்டுவருகிறது. ராசிபுரம் புறவழிச்சாலை திட்டத்தை அரசு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. வரும் சட்டமன்றத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு கடன் சுமையை பாா்க்கும் போது கடன் வாங்குவதில் சாதனை செய்துள்ளது என்று சொல்லலாம். வரும் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் பெரும்பாலான இடங்களை வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றாா்.

பேட்டியின் போது, முன்னாள் அதிமுக அமைச்சா் பி. தங்கமணி, வெ. சரோஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.