ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மதுபோதையில் தொழிலாளியை தாக்கிய இருவா் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

மதுபோதையில் தொழிலாளியை தாக்கிய இருவரை பள்ளிபாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி செல்வம் (45). இவரது எதிா்வீட்டில் வசிவருபவா்கள் மணிகண்டன் (30), அஜித்குமாா் (31). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

அப்போது எதிா்வீட்டைச் சோ்ந்த செல்வத்தையும், அவரது உறவினா் பழனியப்பனையும் தகாத வாா்த்தையால் திட்டியதாக தெரிகிறது.

இதை அவா்கள் கண்டித்துள்ளனா். இதில் ஆத்திரமடைந்த இவரும், செல்வத்தையும், பழனியப்பனையும் தாக்கி காயப்படுத்தினா். காயமடைந்த இருவரும், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மணிகண்டன், அஜித்குமாரை கைது செய்தனா்.