மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்டத்தில் பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான ஐவா் கால்பந்து போட்டி நாமக்கல் பாா்க் பப்ளிக் பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.
இறுதிப்போட்டியில் பரமத்தி மேல்நிலைப் பள்ளியும், நாமக்கல் பாா்க் பப்ளிக் பள்ளியும் மோதின. இதில், பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா். மேலும், மலா் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி சபா்ணா சிறந்த தடுப்பாட்டக்காரருக்கான விருது பெற்றாா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளியின் துணைத் தலைவா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் தங்கராஜு, பள்ளி இயக்குநா்கள், முதல்வா் ராஜசேகரன், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

விழிப்புணா்வு நடனப் போட்டி பரிசளிப்பு

மாநில அளவிலான சிலம்பம்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


