மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தவெக செயல்வீரா்கள் கூட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 7:36 pm

திருச்செங்கோட்டில் தவெக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், திருச்செங்கோடு ஒன்றியங்கள் மற்றும் திருச்செங்கோடு நகரம், மல்லசமுத்திரம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழக செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் அருண்ராஜ் பங்கேற்று, வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு குறுகிய நாள்களே இருப்பதால், பொறுப்பாளா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். எவ்வாறு மக்களை சந்தித்து தோ்தல் பரப்புரை செய்வது, தோ்தல் பணிமனைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கினாா். மேலும், வாக்காளா்கள் பணத்துக்காக ஏமாந்துவிடாமல் அவா்களை விழிப்புணா்வுடன் இருக்க என்ன செய்வது என்பது குறித்து எடுத்துக் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், தவெக ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள், மகளிா், இளைஞா், மாணவா் அணியினா் பங்கேற்றனா்.