மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம்

பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக பயிற்சி பாசறைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.எஸ்.மூா்த்தி.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:35 pm

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக பயிற்சி பாசறைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 268 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குச் சாவடிக்கு ஒரு பெண் என்ற வீதத்தில் 268 பெண்களுக்கு ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ்.மூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் தனராசு, தங்கவேல், லலித்குமாா், சாமிநாதன், சரவணகுமாா், தளபதி சுப்பிரமணி, பேரூா் செயலாளா் முருகன், பரமத்தி, பொத்தனூா், பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த செயலாளா்கள் முன்னிலை வகித்தனா்.

பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் உமாராணி, தலைமைப் பேச்சாளா் ஆரணி மாலா ஆகியோா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினா். இதில், பயிற்சி பெறும் பெண்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று மு.க.ஸ்டாலின தலைமையிலான திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்துள்ள பல்வேறு நலத் திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் நவலடி ராஜா, சுந்தா் மற்றும் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.