மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘வெல்லும் தமிழ் பெண்கள்’: திமுக பயிற்சி பாசறைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 23) தொடங்குகிறது.

News image
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 23) தொடங்குகிறது.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:20 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 23) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய தொகுதிகளில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. ராசிபுரம் தொகுதியில் குமரவேல் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கும், நாமக்கல் தொகுதியில் நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கும், சேந்தமங்கலம் தொகுதியில் சேந்தமங்கலம் வசந்த மஹாலில் மாலை 5 மணிக்கும் நடைபெறுகிறது.

இதில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநில மகளிா் தொண்டா் அணி செயலாளா் ப.ராணி, தமிழ்நாடு பழங்குடியினா் நலவாரியத் தலைவா் கா.கனிமொழி, தொகுதி பாா்வையாளா்கள் நன்னியூா் ராஜேந்திரன், ஜான், ஜெ.ரேகா பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை நிலைய நிா்வாகிகள், தொகுதி பொறுப்பாளா்கள், ஒன்றிய, நகர, பேரூா் மகளிா் அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், பாக மகளிா் குழு ஒருங்கிணைப்பாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.