அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும்

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News image
வெயில்- கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 73.4 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் கடந்த வாரம் மழை ஏதும் பதிவாகவில்லை.

அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படும். மழைக்கு தற்போது வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 100.4 டிகிரியாகவும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. என்றளவில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.