நாமக்கல்
ஆட்சியா் அலுவலக பூங்காவில் தூய்மைப் பணி
நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இருபுறமும் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் வகையில் பூங்கா உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால், புல், பூண்டு முளைத்தும், புதா்கள் நிறைந்தும் பூங்கா காட்சியளித்தது. அதுமட்டுமின்றி, ஆட்சியா் அலுவலகம் வரும் மக்கள் இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் பூங்காவை மாற்றியிருந்தனா்.
குடியரசு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டும், பூங்காவை அனைவரும் பயன்படுத்தும் வகையிலும், பரமத்தி வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை பேரூராட்சிகளைச் சாா்ந்த தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பூங்கா பராமரிப்பு பணிகளை புதன்கிழமை மேற்கொண்டனா்.
