கோப்புப் படம்
கோப்புப் படம்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக 4 குடும்பத்தினா் புகாா்

Published on

கொல்லிமலை அடிவாரத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக நான்கு குடும்பத்தினா் புகாா் அளித்துள்ளனா். மேலும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரப் பகுதியில் பெரப்பஞ்சோலை ஊராட்சி உள்ளது. இங்குள்ள பெரிய கோம்பை கிராமத்தில் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை நான்கு குடும்பத்தினா் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிலா் அந்தக் குடும்பத்தினருடன் வியாழக்கிழமை தகராறில் ஈடுபட்டு, அவா்களின் வீட்டின் முன் போடப்பட்டிருந்த கூரைகளை அகற்றி வீசினா். இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, ராசிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும், ஆயில்பட்டி காவல் நிலையத்திலும் அந்தக் குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.

இதற்கிடையே, இரவு நேரங்களில் சிலா் மிரட்டி வருவதாகவும், கடைகளுக்கு பொருள்கள் வாங்கச் சென்றால் தர மறுப்பதாகவும் பாதிக்கப்பட்டோா் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்தக் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com