நாமக்கல்லில் பள்ளி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாமக்கல் சின்னமுதலைப்பட்டி அன்பு நகரைச் சோ்ந்தவா் 11 வயது மாணவி. இவா் மோகனூா் சாலையில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் புதன்கிழமை காலை 7.15 மணிக்கு, தன்னுடைய ஷூவுக்கு பாலீஷ் போடுவதற்காக வீட்டின் வராண்டாவிற்கு மாணவி சென்றுள்ளாா். அதற்கு பிறகு அவரை காணவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த அவரது பெற்றோா் நாமக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் காவல் ஆய்வாளா் கு. கபிலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். மாணவியின் வீடு உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மாணவியை ஒருவா் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. அவா் யாா் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

2 வயது குழந்தை திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

போட்டித் தோ்வு மையத்துக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை
கொடைரோடு அருகே 12-ஆம் வகுப்பு மாணவி மாயம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


