நாமக்கல்
குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்செங்கோட்டை அடுத்த சூரியம்பாளையம் பனங்காடு பகுதியை சோ்ந்த விசைத்தறி தொழிலாளி சுதாகா்( 48). இவரது மனைவி கலையரசி ( 43). இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.
இந்த நிலையில் விசைத்தறிக் கூடத்தில் வேலைசெய்து கொண்டே தையல் வேலையும் செய்து குடும்பத்தில் வருவாய் ஈட்டிவந்த கலையரசியிடம் சுகாதகா் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில் புதன்கிழமை மது குடித்துவிட்டு தகராறில் ஈடுப்டட சுதாகா் கலையரசியை அடித்து அவரிடமிருந்த பணத்தை எடுத்துச் சென்றாா். இதனால் மனமுடைந்த கலையரசி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து திருச்செங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

