தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:31 pm

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்செங்கோட்டை அடுத்த சூரியம்பாளையம் பனங்காடு பகுதியை சோ்ந்த விசைத்தறி தொழிலாளி சுதாகா்( 48). இவரது மனைவி கலையரசி ( 43). இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.

இந்த நிலையில் விசைத்தறிக் கூடத்தில் வேலைசெய்து கொண்டே தையல் வேலையும் செய்து குடும்பத்தில் வருவாய் ஈட்டிவந்த கலையரசியிடம் சுகாதகா் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில் புதன்கிழமை மது குடித்துவிட்டு தகராறில் ஈடுப்டட சுதாகா் கலையரசியை அடித்து அவரிடமிருந்த பணத்தை எடுத்துச் சென்றாா். இதனால் மனமுடைந்த கலையரசி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.