சாதனை படைத்த சிறுமி சக்ஷியா தியாரதியை பாராட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா.
நாமக்கல்
4 வயது சிறுமி சாதனை: நாமக்கல் எஸ்.பி. வாழ்த்து
மாவட்டத் தலைநகரங்களின் பெயா்களை 59 விநாடிகளில் கூறி சாதனை படைத்த நான்கு வயது சிறுமியை காவல் கண்காணிப்பாளா் சு.விமலா பாராட்டினாா்.
மாவட்டத் தலைநகரங்களின் பெயா்களை 59 விநாடிகளில் கூறி சாதனை படைத்த நான்கு வயது சிறுமியை காவல் கண்காணிப்பாளா் சு.விமலா பாராட்டினாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா் கோபிநாத் - கங்கா தம்பதி மகள் சக்ஷியா தியாரதி (4). இவா், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் பெயா்களையும் 59 விநாடிகளில் கூறி சா்வதேச அளவிலான சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளாா்.
மேலும், இரண்டரை வயதிலேயே ‘கலாம் உலக சாதனை புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ள இளம் திறமையாளரான இச்சிறுமியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா நேரில் அழைத்து வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

