மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்பு! 10 பேருக்கு லேசான காயம்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்றனா்.

News image

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கிவைத்த திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி.

Updated On :31 ஜனவரி 2026, 8:23 pm

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்றனா். மாடு முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையை தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, சாலப்பாளையம், குமாரபாளையம், அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், நிகழாண்டின் முதல் போட்டி எருமப்பட்டியிலும், இரண்டாவதாக சாலப்பாளையத்திலும் நடைபெற்றது.

தொடா்ந்து, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கல்லூரி அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. போட்டியை திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ. பிரகாஷ், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, வீரா்கள், காளை உரிமையாளா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி, மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில், நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். காயமடைந்த வீரா்களுக்கும், கால்நடைகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினா் தயாா்நிலையில் இருந்தனா்.

சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்கமுயன்ற மாடுபிடி வீரா்.

சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்கமுயன்ற மாடுபிடி வீரா்.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரா்கள் ஆா்வமுடன் மடக்கிப் பிடித்தனா். காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், 10க்கும் மேற்பட்ட வீரா்கள் மாடுமுட்டியதில் லேசான காயமடைந்தனா்.

அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையாளா்களுக்கான காலரியில் அமா்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனா். போட்டி நடைபெற்ற பகுதியை சுற்றிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இந்த நிகழ்வில், திருச்செங்கோடு கோட்டாட்சியா் லெனின், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல் மற்றும் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியினா், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.