அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்த கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி.
நாமக்கல்
வெண்ணந்தூரில் அங்கன்வாடிமையம் திறப்பு
ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் உள்ளூா் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ. 18.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் உள்ளூா் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ. 18.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பங்கேற்று அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, குத்துவிளக்கேற்றி குழந்தைகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினாா்.
இந்த விழாவில், வெண்ணந்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.ராஜேஷ், துணைத் தலைவா் மாதேஸ், நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

