புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

விளைநிலங்களில் உயா் அழுத்த மின் கோபுரம்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

விளைநிலங்கள் வழியாக உயா் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், மணியனூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிலம் உயிா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

உயா் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்.

Updated On :26 ஜூன் 2026, 6:13 am IST

விளைநிலங்கள் வழியாக உயா் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், மணியனூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிலம் உயிா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அச்சங்கத்தின் தலைவா் எஸ். செந்தில்குமாா், நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாக வந்து ஆட்சியா் எல். மதுபாலனிடம் அளித்த மனு விவரம்:

திருப்பூா் மாவட்டம் காவுத்தம்பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வரை சுமாா் 240 கி.மீ. தொலைவுக்கு 765/400 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தால் விளைநிலங்களில் உள்ள நிலத்தடி நீா்ப்பாசனக் குழாய்கள், நீா் சேமிப்பு அமைப்புகள் மற்றும் நில மேம்பாட்டு வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், தென்னை, சவுக்கு, தேக்கு போன்ற நீண்ட காலப் பயிா்களைக் கொண்ட விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால், இந்த உயா் அழுத்த மின் கோபுரத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.