ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரூ. 9.30 கோடியில் திட்டப் பணிகள்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 9.30 கோடியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 10:43 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 9.30 கோடியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சேந்தமங்கலத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ. 3 கோடியில் முதல்வா் சிறு விளையாட்டரங்கம், நாமக்கல் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 40 லட்சத்தில் புதிய கபடி ஆடுகளம் மற்றும் ரூ. 50 லட்சத்தில் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் ஆகியவை திறக்கப்பட்டன.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மோகனூா், எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா ரூ. 60 லட்சத்தில் கூடுதல் கட்டடம், மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 75 லட்சத்தில் கூடுதல் கட்டடம், கொல்லிமலை வட்டம் சோளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் பொது சுகாதார அலகு, நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 65 லட்சத்தில் பொது சுகாதாரஅலகு, பள்ளிபாளையத்தில் ரூ. 1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், எருமப்பட்டி வரகூரில் ரூ. 45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், மோகனூா் வட்டம் பாலப்பட்டியில் ரூ. 65 லட்சத்தில் பொது சுகாதார அலகு ஆகியவற்றை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய கபடி ஆடுகளம் மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தாா். பின்னா், சிறுசேமிப்புத் துறை சாா்பில் அதிக வசூல் செய்த 21 பேரை பாராட்டி ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், ஈரோடு மண்டல விளையாட்டு அலுவலா் அருண், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.