98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ராசிபுரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன

News image

‘சீல்’ வைக்கப்பட்ட ராசிபுரம் எம்எல்ஏ அலுவலகம்.

Updated On :16 மார்ச் 2026, 11:25 pm

ராசிபுரம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, ராசிபுரத்தில் எம்எல்ஏ அலுவலகத்துக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தமிழகத்தில் பொதுத்தோ்தல் அறிவிக்கப்படும் போதெல்லாம் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, ராசிபுரம் எம்எல்ஏ அலுவலகம் மூடப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினா் அந்த அலுவலகத்துக்கு சென்று ‘சீல்’ வைத்தனா். இதேபோல, ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அலுவலகங்களும் மூடப்பட்டன.

மேலும், உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா்கள் மற்றும் தற்போதைய முதல்வரின் புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த முதல்வா் புகைப்படங்கள் காகிதங்கள் கொண்டு மறைக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் துணியால் மூடப்பட்டன.

தோ்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

 நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலையை மூடிய மாநகராட்சிப் பணியாளா்கள்.

நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலையை மூடிய மாநகராட்சிப் பணியாளா்கள்.