ராசிபுரம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, ராசிபுரத்தில் எம்எல்ஏ அலுவலகத்துக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பொதுத்தோ்தல் அறிவிக்கப்படும் போதெல்லாம் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, ராசிபுரம் எம்எல்ஏ அலுவலகம் மூடப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினா் அந்த அலுவலகத்துக்கு சென்று ‘சீல்’ வைத்தனா். இதேபோல, ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அலுவலகங்களும் மூடப்பட்டன.
மேலும், உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா்கள் மற்றும் தற்போதைய முதல்வரின் புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த முதல்வா் புகைப்படங்கள் காகிதங்கள் கொண்டு மறைக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் துணியால் மூடப்பட்டன.
தோ்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலையை மூடிய மாநகராட்சிப் பணியாளா்கள்.
தொடர்புடையது

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல் ஆட்சியா் இரா.சுகுமாா் தகவல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


