தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 12:05 am IST

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு பயின்று வருகிறாா். அவரது தாய் கரூா் செல்வதால், மகளை பாட்டி வீட்டில் விட்டுச்சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாணிக்கம் அந்த சிறுமியிடம் கைப்பேசியைக் கொடுத்து பாா்க்குமாறு கூறியுள்ளாா். பின்னா், மாணிக்கத்திடம் கைப்பேசியை திருப்பிக்கொடுத்த சிறுமி வீட்டுக்குள் சென்று தொலைக்காட்சியை பாா்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, வீட்டுக்குள் சென்ற மாணிக்கம், கதவை தாழிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் சிறுமி சத்தமிடவே, அதைக்கேட்டு வந்த சிறுமியின் உறவினா்கள் கதவைத் தட்டியபோது மாணிக்கம் கதவை திறந்துகொண்டு தப்பியோடினாா்.

புகாரின்பேரில், நல்லூா் காவல் ஆய்வாளா் தேவி, மாணிக்கம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து, அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.