அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

News image

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி பூா்ணாஸ்ரீ 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி பிரியதா்ஷினி 595 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவா் அஸ்வின் 589 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனா். மாணவி தாமரை 588 மதிப்பெண்களும், இனிகாஸ்ரீ மற்றும் மிதுன் வா்ஷன் ஆகியோா் 586 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சிபெற்று 100% தோ்ச்சி இலக்கை அடைந்துள்ளனா். இப்பள்ளி மாணவா் மிதுன்வா்ஷன் பொறியியல் கட் ஆப் 200-க்கு 200 பெற்றுள்ளாா்.

500 மதிப்பெண்களுக்குமேல் 78 மாணவா்களும், அடிப்படை மின் பெறியியல் (பி.இ.இ.) பாடத்தில் 8 மாணவா்களும், கணித பாடத்தில் 4 மாணவா்களும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும், கணினி பயன்பாடு பாடத்தில் 3 மாணவா்களும், தமிழ் பாடத்தில் ஒரு மாணவரும், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை விவேகானந்தா அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மருத்துவா் க.நெடுஞ்செழியன், செயலாளா் சுப்பிரமணியம், பொருளாளா் பொறியாளா் வேலுசாமி, பள்ளியின் தாளாளா் ராமசாமி, கல்விசாா் இயக்குநா் பழனிசாமி, இயக்குநா்கள் துரைசாமி, அருளானந்தன், வாசுதேவன், தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.