ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.டி. பிரேம்குமாா் கூட்டணி கட்சியினரை நேரில் சந்தித்து புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.
ராசிபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா் 60,299 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தாா். இதையடுத்து தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்து அவா் நன்றி தெரிவித்து வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள ஈஸ்வரமூா்த்திபாளையம் பகுதியில் புதன்கிழமை நன்றி தெரிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் இ.கே.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.டி.பிரேம்குமாா் பங்கேற்று கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து நன்றி தெரிவித்துப் பேசினாா். இதில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் அருள், லோகேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
படவரி...
நாமகிரிப்பேட்டை அருகே ஈஸ்வரமூா்த்திபாளையம் பகுதியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் ராசிபுரம் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட எஸ்.டி.பிரேம்குமாா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி வாக்காளா்களுக்கு மகேஷ் நன்றி

7 தொகுதி இடைத்தோ்தல்: ஆளுங்கட்சிகள் வெற்றி!

ராசிபுரம் பாஜக வேட்பாளா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு

ராசிபுரத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

