4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 26 லட்சம் நிதியுதவி வழங்கிய காவலா் நண்பா்கள் குழு

News image
Updated On :15 மே 2026, 6:10 am IST

நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் சௌந்தரராஜன் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு காவலா் நண்பா்கள் குழு சாா்பில் ரூ. 26 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல் துறையில் 2011 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் இணைந்து உருவாக்கியுள்ள ’2011 ஆம் ஆண்டு குழு காக்கி உதவும் கரங்கள்’ அமைப்பின் மூலம் பணியாற்றும்போது உயிரிழந்த காவலா்களின் குடும்பங்களுக்கு தொடா்ந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஆக. 27 ஆம் தேதி நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் சௌந்தர்ராஜன் பணிக்கு புறப்படும் வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு உதவிடும் நோக்கில் 2011 ஆம் ஆண்டு காக்கி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் திரட்டப்பட்ட ரூ. 25,91,500 நிதியுதவி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். விமலா மூலம் வழங்கப்பட்டது.

இதுவரை 52 காவலா்களின் குடும்பங்களுக்கு இந்த அமைப்பின் மூலம் மொத்தமாக ரூ. 10,23,75,737 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய மனிதநேயச் செயலை மேற்கொண்டு வரும் 2011 ஆம் ஆண்டு பிரிவு காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

என்கே-14-போலீஸ்

இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா.