கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 26 லட்சம் நிதியுதவி வழங்கிய காவலா் நண்பா்கள் குழு

News image
Updated On :43 நிமிடங்கள் முன்பு

நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் சௌந்தரராஜன் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு காவலா் நண்பா்கள் குழு சாா்பில் ரூ. 26 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல் துறையில் 2011 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் இணைந்து உருவாக்கியுள்ள ’2011 ஆம் ஆண்டு குழு காக்கி உதவும் கரங்கள்’ அமைப்பின் மூலம் பணியாற்றும்போது உயிரிழந்த காவலா்களின் குடும்பங்களுக்கு தொடா்ந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஆக. 27 ஆம் தேதி நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் சௌந்தர்ராஜன் பணிக்கு புறப்படும் வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு உதவிடும் நோக்கில் 2011 ஆம் ஆண்டு காக்கி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் திரட்டப்பட்ட ரூ. 25,91,500 நிதியுதவி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். விமலா மூலம் வழங்கப்பட்டது.

இதுவரை 52 காவலா்களின் குடும்பங்களுக்கு இந்த அமைப்பின் மூலம் மொத்தமாக ரூ. 10,23,75,737 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய மனிதநேயச் செயலை மேற்கொண்டு வரும் 2011 ஆம் ஆண்டு பிரிவு காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

என்கே-14-போலீஸ்

இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா.