இனப் படுகொலை புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் கே.எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ஏ.மாதவராஜன், இணை செயலர் கே.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இறுதிக் கட்ட ஈழப் போரின்போது தமிழினப் படுகொலை புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
சேலம் மாநகரில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றிய தீர்மானத்தை கிடப்பில் போட்ட மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டிப்பது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் ஏகாம்பரம், மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஆர்.நாராயணன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

