நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மேட்டூரில் தேங்காய் சுட்டு சுவாமிக்குப் படையல்

மேட்டூரில் ஆடி முதல் நாளான வியாழக்கிழமை தேங்காயைச் சுட்டு சுவாமிக்குப் படையலிட்டனர். ஆடி முதல் நாளில் தமிழர்கள் தேங்காயில் எள், கடலை, சர்க்கரை, அவல் உள்ளிட்ட பல

Updated On :17 ஜூலை 2014, 9:53 pm

மேட்டூரில் ஆடி முதல் நாளான வியாழக்கிழமை தேங்காயைச் சுட்டு சுவாமிக்குப் படையலிட்டனர்.

ஆடி முதல் நாளில் தமிழர்கள் தேங்காயில் எள், கடலை, சர்க்கரை, அவல் உள்ளிட்ட பல தானியங்களை போட்டுப் வைப்பார்கள். பின்னர், வீட்டிற்கு எதிரே அந்த தெருவில் உள்ளவர்கள் தேங்காய்களை குச்சிகளில் குத்தி வைத்து நெருப்பில் வேக வைப்பார்கள். பிறகு, அங்குள்ள விநாயகர் கோயில் வைத்து படைத்து பிரசாதம் வழங்குவார்கள். மேட்டூர் அருகே உள்ள புதுச்சாம்பள்ளி சுப்பிரமணிய நகரில் தேங்காயை வேகவைத்து விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின்னர், தேங்காய் வேகவைத்த குச்சிகளைக் கொண்டு சிறுவர், சிறுமியர் விளையாடினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.