இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருட்டு: இளைஞர் கைது

இளம்பிள்ளை அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து மூன்றரை பவுன் நகையைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 7:09 am IST

இளம்பிள்ளை அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து மூன்றரை பவுன் நகையைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
இளம்பிள்ளை அருகேயுள்ள வெள்ளை பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் அபுசாலீபு (36). இவர், செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு அப்பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார்.  அப்போது வீட்டின் ஓட்டைப் பிரித்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்துள்ளது.    
இது குறித்து அபுசாலீபு அளித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி  போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  
காவல் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலீஸார் சித்தர் கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின்பேரில் இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவர் வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பதும், மளிகைக் கடைக்காரர் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. 
இதையடுத்து அவரைக் கைது செய்து மூன்றரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.